Wednesday, November 20, 2013

சிரிப்பு 2


டாக்டர்:  "உங்க கணவர் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு!"

நோயாளியின் மனைவி: "நெஜம்மாவா டாக்டர்?"
டாக்டர்:  "ஆமாம், அவரை இனிமே அடிக்காதிங்க...!"
-வி. பார்த்தசாரதி.

****************************************************************************************

கணவன்: "இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்கே!"

மனைவி: "குடிச்சிட்டு வந்துட்டிங்களா?"
-வி. சாரதி டேச்சு.

****************************************************************************************

நீதிபதி: "அடிக்கடி வந்து நீ குற்றவாளிக் கூண்டுல நீக்கிறியே உனக்கு கஷ்டமா இல்லை?"

திருடன்: "கஷ்டமாத்தான் இருக்கு. ஒரு நாற்காலி போடச் சொல்லுங்க எஜமான்...!"
-வி. பார்த்தசாரதி.

Tuesday, November 19, 2013

சிரிப்பு 1

"அவரிடமிருந்து குறுந்தொகை வாங்கி வந்தாயா என்று கேட்கிறாரே, நம்ம தலைவருக்கு இப்போ இலக்கியத்தில் ஈடுபாடு வந்துவிட்டதா?"


"ஒரு மண்ணும் இல்ல, லஞ்சப் பணத்தைதான் நாசுக்கா சொல்றார்..."
- அ. ஜாகீர் உசேன்.

------------------------------------------------------------------------------------------------------
"அந்த மருந்துக் கடைக்காரனை எதுக்கு கண்டபடி திட்டிட்டு வர்றே?"

"பிரிஸ்கிரிப்ஷன்ல டாக்டர் போட்டிருந்த பிள்ளையார் சுழிக்குக்கூட ஒரு மாத்திரை கொடுக்கறானே!"
- சரவணன்.
-------------------------------------------------------------------------------------------------------
நான் இரசித்த சில ஜோக்குகள் பகிர்ந்தேன்.
-குங்ஃபூ சிவா.